Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத் விமான விபத்து; 242 பேரில் 241 பேர் பலி! - ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Prasanth K
வெள்ளி, 13 ஜூன் 2025 (08:42 IST)

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 என்ற போயிங் 787 ரக விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அருகில் இருந்த மக்கள் வாழும் பகுதியில் விழுத்து வெடித்து சிதறியது.

 

இந்த கொடூர விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாமல், விமானம் மோதிய மருத்துவ விடுதி கட்டிடத்தில் இருந்தோர் உள்பட பலர் பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் என்பவர் கடைசி வினாடியில் எமெர்ஜென்சி கதவு வழியாக வெளியே குதித்ததால் காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

உயிரிழந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் 53 இங்கிலாந்துக்காரர்கள், 7 போர்ச்சுக்கல் நாட்டினர் மற்றும் 1 கனடா நாட்டவர் இருந்தனர். இந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் காலமானார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments