Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிரடியில் ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (08:25 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாடம் பொதுக்கூட்டங்களில் பங்குபெற்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் பறக்கவிட்ட மோடி அம்பானிக்கும், நீரவ் மோடிக்கும் ஆயிரம் ஆயிரம் கோடியாக பணத்தை கொடுத்துள்ளார். விவசாயிகளை காப்பாற்றுவேன் என கூறி அவர்களை தவிக்கவிட்டுள்ளார்.
 
வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments