Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: வயநாட்டில் ராகுல் காந்தி வாக்குறுதி!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (14:00 IST)
அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கொண்டு வந்த நிலையில் அந்த திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் அரசியலில் அமைப்பையே இல்லாமல் செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அக்னிபாத் திட்டம் என்பது மிகவும் மோசமான திட்டம் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.  அக்னிபாத் திட்டம் வேண்டும் என்று இந்திய ராணுவம் கேட்கவில்லை அக்னிபாத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தது பிரதமர் அலுவலகம் தான் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

எனவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வயநாடு மக்களிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments