Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: வயநாட்டில் ராகுல் காந்தி வாக்குறுதி!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (14:00 IST)
அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கொண்டு வந்த நிலையில் அந்த திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் அரசியலில் அமைப்பையே இல்லாமல் செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அக்னிபாத் திட்டம் என்பது மிகவும் மோசமான திட்டம் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை ரத்து செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.  அக்னிபாத் திட்டம் வேண்டும் என்று இந்திய ராணுவம் கேட்கவில்லை அக்னிபாத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்தது பிரதமர் அலுவலகம் தான் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

எனவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வயநாடு மக்களிடம் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments