Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் மீண்டும் பதட்டம்: 2 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (17:45 IST)
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இரண்டு வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த மே மாதம் கலவரத்தால் பற்றி எரிந்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு 10 மணியளவில்  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அப்பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments