Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (17:52 IST)
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் மங்களூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சற்றுமுன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  மங்களூரு   - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீரடி காட் சக்லேஷ்பூர் என்ற பகுதியில் நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்தையும் கர்நாடக மாநில அரசு தடை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவு  காரணமாக 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு தகவல் எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments