Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலை அடுத்து நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 17 மே 2021 (06:59 IST)
குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் குஜராத் மாநிலத்தை கடும் சேதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் குஜராத் மக்களை புயல் மிரட்டிக் கொண்டிருக்கும் போது சற்று நேரத்துக்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற பகுதியிலிருந்து 182 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் இல்லை என்றும் ஆனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் மக்களை ஏற்கனவே புயல் மிரட்டிக் கொண்டிருக்கும் போது தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments