Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற காங்கிரஸ்!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (14:10 IST)
33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அக் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் வலுவாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றான கஸ்பா பெத் என்ற சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்ட நிலையில்  அவரது வெற்றியை கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஆச்சரியமாக அவர் முன்னிலையில் இருந்து வருகிறார் என்றும் சற்றுமுன் அவர் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த தொகுதியில் 1991 ஆம் ஆண்டில் தான் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றிருந்தது. அதனை அடுத்து தற்போது 33 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பதும் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த ஆறு தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி நான்கு மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது அடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் எழுச்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments