டெல்லியில் நிரந்தரமாக மூடப்பட்டது ஆப்கானிஸ்தான் தூதரகம்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (11:09 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மாணவர்கள் உட்பட  பலருக்கு  பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தாலிபன் ஆட்சியை  இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. தாலிபான் அரசை அங்கீகரிக்கும் வரை தூதரக விவகாரத்தில் முடிவு எட்டப்படாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறப்பு உதவிகள் இல்லாதது மற்றும் பணியாளர் எண்ணிக்கை குறைப்பு உட்பட சில காரணங்களால் மூடப்படுவதாக ஆப்கான் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 தாலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்தியா சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என மத்திய அரசு கூறியதை அடுத்து தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வர்த்தக ரீதியாக இந்தியா மற்றும் ஆப்கன் நாடுகளுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் இந்தியாவில் தங்கி இருக்கும் ஆப்கன் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments