Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த நபர்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (16:28 IST)
கர்நாடக மாநிலத்தில் தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பரின் கழுத்தை  அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(36). இவர்ச சிந்தாமணி பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாரேஷ், விஜய் இருவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகள் கொண்டு சென்று வியாபரம் செய்து வந்தனர். இந்த நிலையில், விஜய்யின் வீட்டிற்கு மாரேஷ்(34) அடிக்கடி சென்று வந்த நிலையில், மாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக விஜய்க்கு சந்தேகம் வந்தது.இதுபற்றி மாரேஷிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரேஷின் கழுத்தை அறுத்து, ரத்தம் கொட்டியபோது, அதைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ கடந்த 19 ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விஜய்யை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments