Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தொங்கு பால விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அதானி ரூ.5 கோடி!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (09:23 IST)
குஜராத்தில் சமீபத்தில் நடந்து தொங்கு பால விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ அதானி நிறுவனம் முன்வந்துள்ளது.

குஜராத்தின் மொர்பி பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் 135 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 177 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசு இழப்பீடுகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ அதானி தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்த விபத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 7 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 12 குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தை என மொத்தம் 20 குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதற்கு அதானி தொண்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments