Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா நிகழ்ச்சிக்காக ரூ.1.5 கோடி பெற்ற நடிகை பிபாசா பாசு : வலுக்கும் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (18:52 IST)
யோகா தினத்தன்று பெங்களூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை பிபாசா பாசு ரூ.1.5 கோடி சம்பளம் பெற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


 

 
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா பயிற்சி செய்யும் பழக்கமுள்ளவர். அதேபோல் சக நடிகைகளுக்கும் அவர் கற்றுக் கொடுத்து வருகிறார். அதனால், யோகா தினத்தன்று, பெங்களூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு யோகா செய்தார். அவருடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவருக்கு ரூ.1.5 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதோடு, அவர் பெங்களூரு வந்து செல்வதற்கும், ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்குரிய செலவை கர்நாடக அரசே ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
 
இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அரசு சார்ந்த ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நடிகைக்கு இவ்வளவு பணம் கொடுப்பதா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments