Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டிய நடிகர் கைது!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:57 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று திடீரென விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு சிலர் காயமடைந்தனர்.
 
இந்த ட்ராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து என்பவரை டெல்லி போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
 
டெல்லியில் குடியரசு தின விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிய வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments