Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டிய நடிகர் கைது!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:57 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று திடீரென விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்ததால் போலீசார் மற்றும் விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு சிலர் காயமடைந்தனர்.
 
இந்த ட்ராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து என்பவரை டெல்லி போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
 
டெல்லியில் குடியரசு தின விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிய வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments