Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு

பிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு
, வியாழன், 19 நவம்பர் 2015 (01:08 IST)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ள்து.


 

டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் கொண்ட பங்களாவில் பிரதமர் நரேந்திர மோடி வசித்து வருகிறார். இதே பகுதியில் அவரது  அலுவலகமும் அமைந்துள்ளது.
 
இந்த அலுவலகம் அருகே, வாகனம் நிறுத்தும் இடத்தில் மாலை நேரத்தில் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டது. இதனால் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து பிதமர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பணி மாற்றம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக துப்பாகி சூடு நடைபெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil