Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உறங்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : 3வது இடத்தில் சென்னை

உறங்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : 3வது இடத்தில் சென்னை

உறங்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : 3வது இடத்தில் சென்னை
, புதன், 2 நவம்பர் 2016 (15:22 IST)
சமீபத்தில் நைட் பாயிண்ட் என்கிற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் பெண்கள் உறக்கத்திலிருக்கும் போது, அவர்களிடம் நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.


 

 
முக்கியமாக, ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவரே, அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உடன் பிறந்த சகோதரர்கள், வீட்டில் தங்கும் உறவினர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள்தான் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
 
அதிலும் செல்போன்கள வந்த பிறகுதான், இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அதாவது, உறங்கும் பெண்ணை அவர்கள் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து விடுகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீண்டுவது, ஆபாசமாக பேசுவது, சில சமயம் பாலியல் பலாத்காரம் கூட நிகழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 
இதை தடுக்கும் வகையில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், தேவையான அறிவுரைகள் கூற வேண்டும், தூங்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிய சொல்லி வற்புறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
உறங்கும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலில், மும்பை முதலிடத்திலும், பெங்களூர் 2ம் நடத்திலும், சென்னை 3ம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா சிகிச்சைக்கு அப்பல்லோவில் சின்ன மாற்றம்!