Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரில் சிறுமி பலாத்காரம் : தலைமறைவான வழக்கறிஞர் கைது

காரில் சிறுமி பலாத்காரம் : தலைமறைவான வழக்கறிஞர் கைது
, திங்கள், 5 அக்டோபர் 2015 (07:21 IST)
அசாமில் காரில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 
 
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமானகோபி நாத் தாஸ் என்பவர் தான் போலீசாரின் கைது நடவடிக்கை உள்ளாக்கப்பட்டவர். இவர் ஒரு சிறுமியை காரில் வைத்து பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதும் முன்ஜாமீன் கோரி கவுஹாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
2016 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது இந்த வழக்கு புனையப்பட்டுள்ளதாக கோபி நாத் தாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் தாஸூக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதமாக கோபிநாத் தாஸ் தலைமறைவாக இருந்தார்.
 
இந்நிலையில் ஒருமாத இடைவெளிக்கு பிறகு கோபிநாத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கோபிநாத் பின்னர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil