Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (22:31 IST)
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐரோம் சர்மிளா கட்ந்த 9-ம்தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.


 


இதைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  அதன்பின்னர், மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். நீண்டகாலமாக திட உணவு எடுத்துக்கொள்ளாததால், தற்போதும் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மணிப்பூர் மாநில ஒருங்கிணைப்பாளர் தவுதம் மணிஹார் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐரோம் சர்மிளாவை சந்தித்து பேசினர். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று ஐரோம் ஷர்மிளாவைக் கேட்டுக்கொண்ட அவர்கள், முதல்வர் வேட்பாளராக நிறுத்த நாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்