Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்கள்: புதிய யுக்தி

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்கள்: புதிய யுக்தி
, வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (10:17 IST)
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை ஆம் ஆத்மியினர் தனது ஆதரவாளர்களிடம் கொடுத்துளளனர். 
 
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை (பிப்ரவரி) நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்களை கொடுப்பதாக பாஜக மீது ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
 
இந்நிலையில், இதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டும் வகையில் ஆம் ஆத்மி தனது ஆதரவாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை கொடுத்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் அசுதோஷ் தெரிவித்துள்ளார்.
 
பாஜக வினர் யாராவது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டால் அதை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இந்த ஸ்பை கேமிராவில் படம் பிடித்து உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த ஸ்பை கேமிராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் உடனடியாக பெறப்படும் வகையில் பிரத்யேகமாக மையங்களை ஆங்காங்கே ஆம் ஆத்மியினர் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil