Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட கூட பணம் இல்லை : கை விரிக்கும் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (13:34 IST)
தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 

 
தெற்கு கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லியில் ஒன்றரை ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வரும் நிலையிலும் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்கு பணம் இல்லை என்பதுதான் உண்மை. எனது வங்கிக் கணக்கை நான் உங்களிடம் காண்பிக்கிறேன்.
 
எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கிலும் பணம் இல்லை. இருந்த போதிலும், கோவா மற்றும் பஞ்சாப் மற்றும் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்தை துவங்கியுள்ளோம். டெல்லியில் நாங்கள் போட்டியிடும் போது உண்மையில் போட்டியிட்டது டெல்லி மக்கள் தான்.
 
கோவாவில் போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில அரசு விரும்பினால் அடுத்த ஒரு மணிநேரத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது.
 
இதன் காரணமாக போதைப்பொருள் விற்பனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காவல்துறை மூலமாக அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments