Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் ஹர்பஜன் சிங் - ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் எம்.பி. ஆக வாய்ப்பு?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (14:04 IST)
ஹர்பஜன் சிங்குக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்க முதல்வர் பகவந்த்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை என்ற நிலையில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றியதால் அம்மாநிலத்தில் இருந்து அந்த கட்சிக்கு 6 மேல் சபை எம்.பி. உறுப்பினர்கள் புதிதாக கிடைக்கிறார்கள். பஞ்சாப்பில் அடுத்த மாதம் 5 மேல் சபை உறுப்பினர்களின் எம்.பி. பதவி காலியாகிறது. 
 
இதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்க முதல்வர் பகவந்த்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments