Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எனக்கு இல்லை: ஆமீர்கான் விளக்கம்

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எனக்கு இல்லை: ஆமீர்கான் விளக்கம்
, புதன், 25 நவம்பர் 2015 (21:24 IST)
நான் இந்தியன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் என்றும் தனக்கும், தன் மனைவிக்கும் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எனக்கு இல்லை என்று பாலிவுட் நடிகர் ஆமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.


 
 
சகிப்பின்மை தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஆமீர்கான் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கும், என் மனைவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை. என்னை தேச எதிர்ப்பாளராக அழைக்கும் அனைவருக்கும் 'நான் ஒரு பெருமித இந்தியன்' என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
 
நான் மனம் திறந்து பேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச்சலிட்டவர்கள் அனைவருமே நான் குறிப்பிட்ட அந்தக் கருத்தை மட்டும்தான் நிரூபித்திருக்கிறார்கள். நான் ஏற்கெனவே கூறிய கருத்துகளில் (சகிப்பின்மை தொடர்பானவை) உறுதியாக இருக்கிறேன்" என்று ஆமிர்கான் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil