Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்..! கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு சம்மன்!

Senthil Velan
வியாழன், 16 மே 2024 (17:46 IST)
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
டெல்லி முதல்வர் அர்விந்த்  கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.  
 
இதுகுறித்து மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது.

ALSO READ: நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

இந்நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், மே 17ம் தேதி காலை 11 மணிக்கு பிபவ் குமாரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments