Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம்! – மத்திய அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:46 IST)
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பல வகை பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் இணைத்தல் அவசியமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் ஆதார் அட்டைகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தால் அந்த அட்டைதாரர்கள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகளும் மேல் ஆகியிருந்தால் அவர்கள் https://uidai.gov.in/ta/ என்ற இணையதளத்தில் அல்லது அருகே உள்ள ஆதார் சேவை மையத்தில் சென்று புதுபித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments