Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க தடை; உச்சநீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (16:10 IST)
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசு முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


 

 
வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் அவசியம் என மத்த்ய அரசு அறிவித்தது. அதற்காக வருமான வரி செலுத்துவோர் அனைவரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
 
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மே 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதேபோல் ஆதார் எண்ணை கட்டாயமாக யாரிடமும் கேட்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று வங்கி கணக்கு தொடங்கவும், கேஸ் சிலிண்டர் பெறவும் ஆதார் எண் இல்லாமல் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments