Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனில் சார்ஜர் ஏற்றியவாறு அழைப்பை எடுத்து பேசிய வாலிபர் பலி

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (16:00 IST)
ராஜஸ்தானில் போனில் சார்ஜர் ஏற்றியவாறு அழைப்பை எடுத்து பேசிய வாலிபர் பலியானார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24) என்பவர் நேற்று தனது செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். 
 
அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்காமலேயே காதில் வைத்து பேசத்தொடங்கினார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜுலால் குஜாரின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. 
 
இதில், கை மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவன்மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மின் அதிர்ச்சி மற்றும் தீக்காயம் காரணமாக வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: தொண்டர்களுக்கு துரை வைகோ முக்கிய வேண்டுகோள்..!

சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்.. விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

Show comments