Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாட்டுத் தட்டிற்காக அநியாயமாக கொல்லப்பட்ட இளைஞர்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (10:25 IST)
உத்திரபிரதேசத்தில் விருந்தில் பிளேட் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தகராறின் போது வாலிபர் ஒருவர், அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் விக்ராம்பூர் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. விழாவில் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது பிளேட் தட்டுப்பாட்டால் சிலருக்கு பிளேட் வழங்க தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு கோஷ்டி வாய்த் தகராறில் ஈடுபட்டது.
 
ஒருகட்டத்தில் சண்டை முற்றிப்போகவே, வாய்ச் சண்டை கைக்கலப்பாக மாறியது. இந்த சண்டையில் விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளேட்டிற்காக  இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்