Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோழி மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (12:33 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அவரது தோழியுடனான நட்பை முறித்ததால் ஆத்திரமடைந்த அவர் கூலிப்படையைப் ஏவி தனது தோழியின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சப்னா என்ற இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த  தீபா என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இருவரும் நட்போடு பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் சப்னா, தீபா உடனான நட்பை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தீபா சப்னாவை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில் சப்னா ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், அவர்மீது ஆசிட் வீசியுள்ளனர். 25 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சப்னாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் தீபாவையும் மர்ம நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments