Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 நாட்கள் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மபியில் கோரம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (11:55 IST)
மத்தியபிரதேசத்தில் 2 லட்சத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 24 நாட்கள் அடைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். 
 
இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அவருக்கு புவராஜ் என்பவன் போன் செய்து, இந்தூரில் ரூ. 15,000 சம்பளத்திற்கு வேலை இருப்பதாகவும் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளான். இதனை நம்பிய அந்த பெண் யுவராஜை நேரில் சந்தித்தார்.
 
பின்னர் யுவராஜ், அந்த இளம்பெண்ணை ஒரு மாற்றுத் திறனாளியிடம்(காது மற்றும் வாய் பேச முடியாதவரிடம்) 2 லட்சத்திற்கு விற்றுள்ளான். அங்கு அந்த பெண் 24 நாட்கள் மிரட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் வெளியே சென்ற போது அந்த பெண் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய யுவராஜையும் அந்த மாற்றுத் திறனாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments