Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்திய பெண் கைது

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (11:51 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அவரை மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போதை தடுப்பு அதிகாரிகள், விமானத்தில் வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தபோது அதில் 4ž கிலோ கொக்கைன் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணையை துரிதப்படுத்தினர்.
 
விசாரணையில் அந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிகாய் ஜோநாடி சைன் (வயது 36) என்பதும் ஒரு கிலோ கொக்கைனுக்கு ரூ.3 லட்சம் கமி‌ஷன் என்ற அடிப்படையில் கொக்கைனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments