Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி..! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Senthil Velan
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:27 IST)
ஹைதராபாத்தில் உள்ள தங்கும் விடுதியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலியின் அஞ்சயா நகரில் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள நிலத்தடி நீர் சம்ப் தொட்டி திறந்திருந்த நிலையில், 22 வயதான மென்பொருள் ஊழியர் ஷேக் அக்மல், எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார்.
 
அப்போது அங்கிருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் திறக்கப்பட்ட தொட்டியில் விழுந்ததில் அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்து வந்த ராயூர் போலீசார், அலட்சியம் காட்டியதற்காக, குறிப்பாக சம்ப் மூடியை திறந்து வைத்ததற்காக, விடுதி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திறக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் ஷேக் அக்மல் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments