Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன் கைது

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (09:36 IST)
ஹரியானாவில் பள்ளி தலைமை ஆசிரியயை மாணவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் யமுனா நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுருந்து வந்தவர் ரித்து சாஹப்ரா(47). கேசவ் என்ற மாணவன் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். அந்த மாணவன் சரிவர படிக்காததால் ரித்து கேசவை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தலைமை ஆசிரியயை கொல்ல திட்டமிட்டு, தனது தந்தையின் துப்பாக்கியோடு பள்ளிக்கு சென்றுள்ளான். தலைமை ஆசிரியையின் அறைக்கு சென்ற கேசவ், ரித்துவை சரமாரியாக சுட்டுள்ளான். இதில் ரித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழதார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவன் தலைமை ஆசிரியயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments