Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்த மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (07:36 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த நிலையில் அந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்லெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள மல்லபுரம் மாவட்டத்தில் திரு நவ்யா மற்றும் திருர் என்ற பகுதிகள் இடையே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வந்தே பாரத் ரயில் மீது தொடர்ச்சியாக கல்லெறியும் சம்பவம் நடந்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தால் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments