Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் வாங்கி வைத்திருந்த மதுவை திருடிய தந்தை! – அடித்து துவைத்த மகன்!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (14:26 IST)
கேரளாவில் தான் வாங்கி வைத்திருந்த மதுவை தனது தகப்பனார் திருடி குடித்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை அடித்து துவைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கேரளா சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் தந்தை – மகன் சண்டையிடும் வீடியோ வேகமாக பரவி வந்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென அதிகாரிகள் சிலர் போலீஸாருக்கு அறிவுறுத்தியதின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

விசாரணையில் தந்தையை அடித்த மகன் பெயர் ரெவிஸ் என்பது தெரியவந்துள்ளது. ரெவிஸ் மது அருந்தும் பழக்கம் உடையவர். அதே போல அவரது தந்தையும் மது விரும்பியாக இருந்திருக்கிறார். ஒருநாள் ரெவிஸ் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைத்துள்ளார். இதை கண்ட அவரது தந்தை யாருக்கும் தெரியாமல் அந்த மதுவை எடுத்து குடித்திருக்கிறார்.

வீடு திரும்பிய ரெவிஸ் மது பாட்டில் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். அவரது தந்தையிடம் சென்று சண்டை போட்டிருக்கிறார். அவரது தந்தை நான் மது பாட்டிலை பார்க்கவே இல்லை என சாதித்திருக்கிறார். இதனால் கடும் கோபம் கொண்ட ரெவிஸ் தனது தந்தையை சரமாரியாக அடித்திருக்கிறார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து அவரது தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் ரெவிஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுவுக்காக பெற்ற தந்தையையே மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments