Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் சென்ற உறவினர்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (21:39 IST)
மத்திய பிரதேச மாநிலம் சட்டார்பூரில் இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் உறவினர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மா நிலத்தில் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டார்பூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் 4 வயது சிறுமி உயிரிழந்தார், அப்போது ஆம்புலன்ஸ் வசதியின்ரி உறவினர்கள் சிறுமியின் உடலை தோளில் சுமந்து சென்றனர்.

இதேபோல் மற்றொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.  அம் மா நிலத்தில் உள்ள பதான் என்ற பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவால் சட்டார்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.  இந்த நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் உறவினர் சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் தூக்கிச் சென்றார்.

இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் மா நில அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments