குடியரசுத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:11 IST)
கேரளாவிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவரை கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா சென்றார். பின் மதியம் தமிழகம் வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதியைப் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின் கேரளா புறப்பட்டு சென்றார்.
 
3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்ற குடியரசுத் தலைவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
 
இந்நிலையில் நேற்றிரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், குடியரசுத் தலைவர் கொலை செய்யப்படுவார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து அந்த நம்பரை வைத்து விசாரித்த போலீஸார், கொலை மிரட்டல் விடுத்த திருச்சூர் பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments