Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:11 IST)
கேரளாவிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவரை கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா சென்றார். பின் மதியம் தமிழகம் வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதியைப் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின் கேரளா புறப்பட்டு சென்றார்.
 
3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்ற குடியரசுத் தலைவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
 
இந்நிலையில் நேற்றிரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், குடியரசுத் தலைவர் கொலை செய்யப்படுவார் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து அந்த நம்பரை வைத்து விசாரித்த போலீஸார், கொலை மிரட்டல் விடுத்த திருச்சூர் பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments