Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்குன்னு கேட்ட இளைஞரை சுட்டுக்கொன்ற பஞ்சாயத்து தலைவர்

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (07:41 IST)
அரியானாவில் சொத்து விவரத்தைக் கேட்ட இளைஞரை பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பிப்லி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான  அஷிஸ் தாஹியா(24), அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான  ராம் நிவாசின் சொத்து விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்.டி.ஐ) மூலம் கோரியுள்ளார். 
 
இதனையறிந்த ராம் நிவாஸ் அந்த இளைஞர் மீது கடும் கோபமடைந்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் இருப்பிடத்திற்கு சென்ற ராம் நிவாஸ், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஷிஷை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அஷிஸ் தாஹியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் கொலை செய்த ராம் நிவாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments