Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்குன்னு கேட்ட இளைஞரை சுட்டுக்கொன்ற பஞ்சாயத்து தலைவர்

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (07:41 IST)
அரியானாவில் சொத்து விவரத்தைக் கேட்ட இளைஞரை பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பிப்லி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான  அஷிஸ் தாஹியா(24), அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான  ராம் நிவாசின் சொத்து விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்.டி.ஐ) மூலம் கோரியுள்ளார். 
 
இதனையறிந்த ராம் நிவாஸ் அந்த இளைஞர் மீது கடும் கோபமடைந்துள்ளார். பின்னர் அந்த இளைஞரின் இருப்பிடத்திற்கு சென்ற ராம் நிவாஸ், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அஷிஷை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அஷிஸ் தாஹியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் கொலை செய்த ராம் நிவாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments