Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (10:09 IST)
நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்
நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்பி வரும் நிலையில் இனிமேல் நாடாளுமன்றத்திற்கு என ஒருங்கிணைந்த தனியான தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட உள்ளது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
 
சற்றுமுன் மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இது குறித்து கூறிய போது நாடாளுமன்றத்திற்கு என ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படுவதாகவும் இந்த சேனல் திறப்பு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
லோக்சபா மற்றும் ராஜசபா நிகழ்ச்சிகளை இந்த டிவிகளில் ஒருங்கிணைத்து ஒளிபரப்பாக இருப்பதாகவும் சன்சத் டிவி என்ற பெயரில் புது சேனல் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்பிக்களை நடவடிக்கைகள் குறித்து இனிமேல் இந்த தொலைக்காட்சியில் நேரடியாக பொதுமக்கள் பார்க்கலாம் என்றும் இந்தத் தொலைக்காட்சியில் மூலம் தங்களுடைய தொகுதி எம்பிக்கள் தங்கள் தொகுதி குறித்து என்ன பேசுகிறார்கள் என்பதை அவ்வப்போது பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments