Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலுடன் சேர்ந்து 3 வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (16:23 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் காதலனின் உதவியுடன் மகளைக் கொன்று ஓடும் ரயிலில் உடலை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டிஉப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் 2 குழ்ந்தைகளையும், கணவர் 3 குழந்தைகளையும் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், சன்னி என்ற நபருடன் சன்னிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்தை மீறி  இவர்களுக்கு கள்ள உறவு இருந்துள்ளது. எனவே சுனிதாவின் 3 வயது குழந்தை இவர்களுக்குத் தொல்லையாக இருப்பதாக இருவரும் நினைத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, அந்தக் குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 3 வயது குழந்தையை கழுத்து நெறித்துக் கொன்று, காதலன் சன்னியின் உதவியுடன்,  குழந்தையின் சடலத்தை ஒரு போர்வையில் சுற்றி, ஸ்ரீகங்கா நகர் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, காலை 6.10 மணீக்கு ஒரு ரயிலில் ஏறிய இருவரும் குழந்தையின் உடலை ஒரு கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் வந்ததை அடுத்து,  சுனிதாவிடம் விசாரித்தனர்.

அவர் தன் மகளை கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, சுனிதாவையும் அவரது கள்ளக் காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments