Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை : சொத்து தகராறில் விபரீதம்

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (12:11 IST)
மகராஷ்டிர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கசார்வடாவலி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்கள்  கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.  அதில் அனைவரும் பலியாகினர். அதில் 7 குழந்தைகளும் 6 பெண்களும் அடக்கம். அதன்பின் அவர் கையில் கத்தியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
 
அதில் ஒரு பெண் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அதனால் போலீசாரால் அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் வாங்க முடியவில்லை.
 
சொத்து தகராறின் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments