Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (13:49 IST)
ஒடிசா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமியை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் குலாசர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சாகு. இவரது மகள் ராதா சாகு. ராதா சாகு விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டின் அருகேயுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆழ்துளை கிணற்றின் அருகே 16 அடி குழியைத் தோண்டி, அதன்வழியாக சென்று குழந்தையை உயிரோடு மீட்டார். 

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத் துறையினரின் இச்செயலுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments