Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 பெண்களை ஏமாற்றிய மோசடி இளைஞர் ! அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (17:19 IST)
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் வசிப்பவர் 25 வயது இளைஞர். இவரை சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அதன்பிறகுதான் அந்த நபரைப் பற்றிய பல விசயங்கள் மூட்டை மூட்டையாக அவிழ ஆரம்பித்தன.
சமீபத்தில் விசாகபட்டினத்தில் உள்ள சத்யா நகரில் வசிக்கும்  இளைஞர் சந்தீப் மீது, அவரால் பாதிக்கபட்ட  ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
 
சந்தீப் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பணக்கார  பெண்களைத் தேடி அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி, பின்னர் நெருக்கமாக பழகி அதன் மூலம் அவர்களிடம் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவர். 
 
அதாவது, மேற்கூறிய பெண்ணுக்கு அலைபேசியில் அழைத்து, நான் மென்பொறியாளர் பேசுகிறேன். உங்கள் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது. அதை அழிப்பதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று 40 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என் பல தவணைகளில் கேட்டு வாங்கியுள்ளார்.
 
ஒருகட்டத்தில் அப்பெண்ணுக்கு பந்தேகம் வரவே பணம் தர் மறுத்தார். பின்னர் அப்பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாக பகிரப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பாதிக்கப்பட்ட்இதுகுறித்து போலீஸாரிடம் அப்பெண் புகார் கூறினார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சந்தீபை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் இதுபோல் 300 ற்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதாவும் தெரியவந்துள்ளது. 
 
மேலும் சந்தீபிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பெண்கள் தங்கள் சொந்த விசயங்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments