Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் மருத்துவ செலவிற்கு குழந்தையை விற்க முயன்ற கணவன் - போலீஸார் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (13:15 IST)
உத்திரபிரதேசத்தில் மனைவியின் மருத்துவ செலவிற்காக நபர் ஒருவர் தனது 4 மகளை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவிந்த் பன்ஜாரா. இவருக்கு சுக்தேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது.
 
இந்நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமுற்றார். 7 மாத கர்ப்பிணியான அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுக்தேவி மோசமான நிலையில் இருப்பதாகவும் சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யும்படியும் ரவிந்திடம் கூறியுள்ளனர்.
 
ரத்தம் பெற போதிய பணம் இல்லாததால், தனது 4 வயது மகளை ரவிந்த் விற்க முயன்றார். இதனையறிந்த போலீஸார் அதனைத் தடுத்து நிறுத்தினர். பின் அவர்கள் உன் மனைவிக்காக சிகிச்சை செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என ரவிந்திடம் கூறினர். இதனால் ரவிந்த் நிம்மதி அடைந்தார்.
 
பொதுமக்கள் பலர் போலீஸை விமர்சித்து வரும் சூழலில், இந்த போலீஸ்காரர்கள் செய்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments