Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொஞ்சம் பண கஷ்டம்.. ஆன்லைனில் காசு கேட்ட கவர்னர்?” – இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:54 IST)
இமாச்சல பிரதேசத்தின் கவர்னர் இன்ஸ்டாகிராமில் வந்து சிலரிடம் பண கஷ்டம் என சொல்லி காசுகேட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பல வகைகளில் மக்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பிரபலங்கள் பெயரில் போலி ஐடி மூலமாக காசு கேட்பது.

பிரபலமான ஆட்கள் பெயரில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் போலி ஐடி உருவாக்கி அதில் மற்ற நபர்களின் இன்பாக்ஸ் சென்று பயணம் செய்த வழியில் பெட்ரோல் இல்லாமல் மாட்டிக் கொண்டதாக, மருத்துவ அவசரம் என பல காரணங்களை கூறி பணம் அனுப்ப சொல்லுவது தொடர்கதையாக உள்ளது.

சமீபத்தில் இமாச்சல பிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கிய கும்பல் அதன் மூலமகா அவசர உதவி என மக்களிடம் பணம் கேட்டுள்ளது.

இதுகுறித்து தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என மக்களை கவர்னர் எச்சரித்துள்ளார். மேலும் அந்த போலி ஐடியை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments