யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் வீடியோக்களுக்கு சென்சார்: நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (16:35 IST)
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவு செய்வது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் தற்போது அதில் அதிகமான வருமானம் கிடைப்பதால் அதிக பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய விஷயங்கள் வீடியோக்களாக பதிவு செய்யப்படுகின்றன
 
பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள், பொய்யான தகவல்கள் கொண்ட வீடியோக்கள், வதந்திகளை பரப்பும் வீடியோக்கள், கிசுகிசுக்கள் கொண்ட வீடியோக்கள் ஆகியவை யூடியூபில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருவதால் இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் சினிமாக்களுக்கு இருப்பது போல் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் உள்ள வீடியோக்களையும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே வலுத்து வருகிறது ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் அதற்கும் சென்சார் வேண்டும் என்று கூறப்படும் நிலையில் தற்போது சமூக வலை தளங்களில் உள்ள வீடியோக்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது 
 
இந்த நிலையில் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments