Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரியாக படிக்காத மாணவியை அடித்த ஆசிரியர். வழக்கு போட்ட பெற்றோர்..!

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
சரியாக படிக்காத மாணவியை ஆசிரியர் அடித்த நிலையில் அவர் மீது மாணவியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாகான் என்ற கிராமத்தில் உள்ள ஆறு வயது சிறுமி நன்றாக படிக்கவில்லை என்றும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவரது ஆசிரியர் சிறுமியை அடித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி, ஆசிரியர் அடித்து விட்டதாக தனது தாயாரிடம் கூறி அழுத நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார்.

இதனை அடுத்து ஆசிரியர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ஆசிரியரிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments