Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்: கங்கனாவின் வெற்றிக்கு எதிராக வழக்கு..!

Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (11:04 IST)
நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட வேட்ப மனு தாக்கல் செய்தவரின் மனு  நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதோடு நான் போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத்போட்டியிட்டார் என்பதும் அவர் சுமார் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தொகுதியில் லாயக் ராம் நெகி என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. வனத்துறையில் ஓய்வு பெற்ற அலுவலரான அவர் குடிநீர், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து நிலுவையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவரது மனது நிராகரிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் ஒரு நாள் அவகாசம் கேட்டு அதற்குள் சான்றிதழை சமர்ப்பித்து விட்டதாகவும் இருப்பினும் நான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாகவும் நான் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments