Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது பாஜக அரசு வழக்குப்பதிவு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:56 IST)
பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடகா பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவார் என்றும் அவர் ஒவ்வொரு இந்து வீட்டிலும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் நம்மை தாக்க வருபவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார். 
 
இந்த நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர் மீது கர்நாடக மாநில பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிரக்யா சிங் தாக்கூர் மீது இரு பிரிவுகள் இடையே மோதலை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தபோது இந்துக்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்தே அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments