Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது பாஜக அரசு வழக்குப்பதிவு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:56 IST)
பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடகா பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவார் என்றும் அவர் ஒவ்வொரு இந்து வீட்டிலும் கத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் நம்மை தாக்க வருபவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருந்தார். 
 
இந்த நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூர் மீது கர்நாடக மாநில பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிரக்யா சிங் தாக்கூர் மீது இரு பிரிவுகள் இடையே மோதலை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தபோது இந்துக்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்தே அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments