Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Mahendran
புதன், 1 மே 2024 (14:36 IST)
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிற்து.
 
அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா என்பது குறித்து விளக்கம் அளித்த  IMA துணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், கோவிஷீல்டின் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து அப்போதே ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
 
அதேபோல் கோவிஷீல்டால் ஏற்படும் பக்கவிளைவு என்பது மிகவும் அரிது என்றும், இந்தியாவில் ஒரு மில்லியன் டோஸ்களுக்கு 0.61 என்ற விகிதத்திலேயே பக்கவிளைவுகள் குறித்த வழக்கு பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments