Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈவிடீசிங் செய்த வாலிபரை கண்டித்தவர் கொடூர கொலை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:00 IST)
கேரளாவில் உறவுக்கார பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்று கண்டித்த ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் நாகரிகமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக குற்றச் சம்பவங்கள் நாளுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
 
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜித்,  ஆட்டோ டிரைவர். சுஜித்தின் உறவு பெண் ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த மிதுன் என்ற வாலிபர் ஈவ்டீசிங் செய்து உள்ளார். இதுபற்றி சுஜித்திடம் அந்த பெண் கூறி அழுதார். உடனே மிதுனை அழைத்து சுஜித் கண்டித்தார். 
 
அதன்பிறகும் மிதுன் அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். மீண்டும் மிதுனைக் கண்டித்தார் சுஜித். அப்போது திடீரென்று மிதுன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுஜித்தை சரமாரியாக குத்திவிட்டு ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த சுஜித் ரத்தவெள்ளத்தில்  உயிருக்கு போராடினார். 
 
பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மிதுனை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments