Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றுக்குள் காற்றை நிரப்பிய சிறுவன்: மரணமடைந்த துயர சம்பவம்..

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (17:37 IST)
மத்திய பிரதேசத்தில், காற்றடிக்கும் பம்பு கொண்டு வயிற்றில் காற்றடித்த சிறுவன் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், நேற்று விடுமுறை என்பதால், சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த காற்று பம்பு ஒன்றை எடுத்து வந்து விளையாடினர். அப்போது அந்த சிறுவனும் விளையாட்டுப் போக்கில், தனது வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியுள்ளான்.

பின்னர் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போது, சிறுவனின் வயிறு வீங்கியுள்ளது. மூச்சு விடவும் திணறியுள்ளான். சிறுவனை விசாரித்த பெற்றோருக்கு, வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியது தெரியவந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சிறுவனின் தந்தையை விசாரித்தனர். அதன் பின்பு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடிய சிறுவன், வயிறு வீங்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments