Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலி

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:05 IST)
மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி இருந்து வந்தார்.
 
இந்நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த குருநாத் வாமன் லாஸ்னி, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு டிராவல்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குருநாத் காரின் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், குருநாத் சம்பவ இடத்திலே பலியானார்.
 
விபத்தை ஏற்படுத்திய டிராவல்ஸ் டிரைவர் தலைமறைவானார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குருநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments